தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள்

தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள்



சுமார் 280 நாட்கள் வரை கருவில் சுமந்த குழந்தையை பிரசிவித்த பிறகு அந்த தாய்க்கு பிறப்புறுப்பில் இரத்தப் போக்கு உண்டாகும் அது அவர்களுக்கு ஒருவிதமான சோர்வை கொடுக்கும் இது எல்லா பெண் களுக்கும் உண்டாவதுதான். இதில் பயப்படத் தேவையில்லை இவை தற்காலிகமானதுதான் என்றாலும் பாதுகாப்பாக அவற்றை அப்பெண் கள் கடக்க சுகாதார முறைகளை மிகச் சரியாகவும் தீவிரமாகவும் பின்பற்றினாலே போதும். அதுகுறித்து கீழே படித்து உணர்ந்து கொள்ளுங்கள்.


பொதுவாக பெண்கள், குழந்தையை பிரசவித்த‌ பிறகு தொடர்ச்சியாக‌ நான்கிலிருந்து ஐந்து வாரத்துக்குள் இரத்தப்போக்கு நின்று விடும். சிலருக்கு ஆறு வாரங்கள் வரையிலும் நீடிக்க வாய்ப்பு உண்டு. இது சாதாரணமான விஷயமே. சுகப்பிரசவம் ஆனவர்களுக்கு இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால் சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு, மகப்பேறு மருத்துவர்கள் அப்போதே கருப்பையையும் சுத்தம் செய்துவிடுவதால் அவர்களுக்கு இந்த‌ ரத்தப் போக்கு அதீத அளவில் இருக்காது. 
 
தொடர்ச்சியாக இரத்தபோக்கு இருக்காமல் கருப்பையின் சுருங்கி விரியும் தன்மைக்கேற்ப அவ்வபோது ஏற்படுவதால் திடீரென்று ஒரு நேரம் ரத்த போக்கும் இன்னொரு நேரம் ரத்த போக்கு இல்லாமல் இருப்பதுமாக‌ மாறி மாறி நிகழும் நிகழ்வு என்பதால் இதுவும் சாதாரணமானதுதான். 
 
மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இரத்தப் போக்கை விட ஐந்து மடங்கு இரத்தப் போக்கு அதிகளவில் இருக்கும் போது நீங்கள் மருத்துவரை கண்டிப்பாக அணுகி அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்வ‌து நல்லது. சில நேரங்களில் கருப்பையின் நஞ்சுக்கொடியின் சிறுசிறு துகள்கள் ஒட்டியிருந்தாலும், தேவையில்லாத நோய் தொற்று ஏற்பட்டிருந்தாலும் அதிக ரத்தப் போக்குக்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன•  
 
அதன் காரணமாக‌ அதிகளவில் இரத்தப்போக்கு ஏற்படும் போது அதனை அலட்சியப்படுத்தக் கூடாது. தாமதிக்காமல் அதற்குரிய‌ மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சையை எடுத்துக் கொள்வது என்பது பாதுகாப்பானது. அதிகநாட்கள் இந்த அதிக இரத்த போக்கு தொடர்ந்தால் கண்டிப்பாக அலட்சியப்படுத்தக்கூடாது இதே போலவே இந்த‌ இரத்தப் போக்கு பழுப்பு நிறத்தில் கசிவு உண்டாகும். இது எந்த வித பாதிப்பையும் அப்பெண்களுக்கு ஏற்படுத்தாது. ஆனால் இந்த இரத்தப்போக்கு சாதாரணமாக இருந்தாலும் இரத்தக் கசிவின் போது துர்நாற்றம் வந்தால் அப்பெண்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுதுவது மிகவும் நல்லது.
 
இரத்தப்போக்கு ஏற்படும்போது தொற்று ஏற்படாமல் மிகுந்த எச்சரிக்கையாக‌ பார்த்துக் கொள்வது மிகமிக‌ அவசியம். குறிப்பாக பெண்களின் பிறப்புறுப்பில் பாதிப்பில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் குழந்தை பிறந்த 10 நாட்கள் வரை கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.. நாள் ஒன்றுக்கு இரத்தப் போக்கை பொறுத்து தரமான காட்டன் நாப்கின்கள் 5 அல்லது 6 முறை வரை மாற்றி அணிவது பாதுகாப்பானது.
 
சிறுநீர் பையில் தேங்கியிருக்கும் )கர்ப்பக்காலத்தில்) சேமித்த நீர் மற்றும் தாது உப்புகள் அனைத்தும் குழந்தை பிரசவித்ததும் அவை சிறுநீராக வெளியேறிவிடும். அதன் காரணமாக அப்பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். எத்தனை முறை சிறுநீர் கழிக்கும் போதும் அத்தனைமுறையும் நாப்கினை மாற்றுவது மிகமிக‌ நல்லது.
 
நாப்கின் ஒவ்வொரு முறையும் மாற்றும் போதும் மிதமான சுடுநீரில் கொண்டு பிறப்புறுப்பை சுத்தமாக கழுவிய பிறகே நாப்கின் மாற்ற வேண்டும். இதன் காரணமாக அந்த இடத்தில் இருக்கும் ஒருவித எரிச்சலும், வலி உணர்வும் சீக்கிரமாக ஆறிவிட‌க் கூடும். மேலும் அதிகபட்சமாக மூன்று மணிநேரத்துக்கு ஒரு முறையாவது  நாப்கினை மாற்ற வேண்டும். இரவு நேரங்களில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது மாற்ற வேண்டும். இது தொற்றுகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றி ஆரோக்கியத்தை பேணும். 
 
சுகப்பிரசவமோ சிசேரியனோ இரண்டில் எதுவாக‌ இருந்தாலும் பிறப்புறுப்பை சுத்தமாக நோய்த்தொற்று வராமல் வைத்திருப்பது அவசியம். பிறப்புறுப்பில் தையல் இடப்பட்டிருந்தால் (இப்போது நவீன மருத்துவத்தில் அவை வலியையும் எரிச்சலையும் உண்டாக்கு வதில்லை) நீங்கள் கவனமாக பராமரிக்க வேண்டும்.
 
முதலில் மலச்சிக்கல் பிரச்சனையின்றி பார்த்துக் கொள்வது நல்லது. முதல் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும், இயல்பாக தீர்க்கும் இயற்கை உணவுகளையும்  தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
மருத்துவரின் பரிந்துரை செய்திருந்தால் கிருமி நாசினி (டெட்டால் போன்று) கலந்த தண்ணீரில் சுத்தம் செய்வது சிறப்பு. அதே போன்று சுத்தம் செய்யும் போது எப்போதும் முன்பிருந்து பின்பாக சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்யா விட்டால் தேவையற்ற‌ தொற்று பரவு வதற்கு வாய்ப்புண்டு. அதே போன்று கைகளை நன்றாக சுத்தம் செய்த பிறகு குழந்தையை தூக்குவது நல்லது.
 
பிரசவக் காலத்தில் ஏற்கனவே அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தால் . பிரசவக் காலத்துக்கு பிறகும் இரத்தப்போக்கு தொடரும் காரணத்தினால் உடலில் போதுமான அளவு சத்தும் வலுவும் குறையத் தொடங்கியிருக்கும். மேலும் குழந்தைக்கு தாய்ப்பாலும் கொடுப்பதால் அதிகளவு ஊட்டச்சத்தை பிரசவித்த பெண் பெற வேண்டும்.
 
மருத்துவர் பரிந்துரையின் பேரில் சத்து மிக்க உணவை கண்டிப்பாக சாப்பிட்டு வர வேண்டும். அரிசி உணவை 30 சதவீதமும் காய்கறிகளை 30 சதவீதமும், கீரை வகைகளை 20 சதவீதமும், அசைவம் சாப்பிடுபவர் களாக இருந்தால் 20 சதவீதம் அசைவ உணவையும் திட்டமிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் குழந்தையின் ஆரோக்கியமும் முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
 
மேலும் பூண்டு, பால், பச்சை வேர்க்கடலை போன்றவற்றையும் எடுத்து கொண்டால் தாய்ப்பாலை அதிகரிக்கும். தினந்தோறும் ஒரு டம்ளர் பாலில் பூண்டு பற்கள் 5 எண்ணிக்கையில் தட்டி போட்டு பாலை நன்றாக கொதிக்க வைத்த பிறகு குடித்து வந்தால் தாய்ப் பால் சுரப்பு அதிகமாவதோடு. உடலுக்குத் தேவையான‌ நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
 
இது தாய்சேய் இருவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பதோடு அடுத்த குழந்தை பிறப்பின் போதும் ஆரோக்கியம் தொடரும். அகவே கர்ப்பக் காலத்தில் தொடரும் பராமரிப்பை பிரசவக்காலத்துக்குப் பிறகும் எடுத்துக் கொள்வதும் முக்கியம். 


#சுகப்பிரசவம், #பிரசவம், #நார்மல், #சிசேரியன், #அறுவைசிகிச்சை, #கருப்பை, #கர்ப்பப்பை, #கரு, #குழந்தை, #தாய், #சேய், #தாய்_சேய், #பூண்டு, #பால், #பச்சை# வேர்க்கடலை, #பிறப்புறுப்பு, #விதை2விருட்சம், #Normal_Delivery, #Childbirth, #Normal, #Cesarean, #Uterus, #Cervix, #Embryo, #Baby, #Mother, #Garlic, #Milk, #Green #Peanut, #Vaginal, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,