என் 18 வயதில் இருந்தே - நடிகை ராஷ்மிகா மந்தனா

என் 18 வயதில் இருந்தே - நடிகை ராஷ்மிகா மந்தனா



தெலுங்கில் கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் திரை ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமானவர்தான் நடிகை ராஷ்மிகா மந்தனா மேலும் இவர் தெருங்கு உட்பட‌, இந்தி, தமிழ் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் கலந்து உரையாடு கிறார். “ஊரடங்கு நாட்களில் என்ன செய்கிறீர்கள்? அதை எப்படி உணர்ந்தீர்கள்?” என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து ராஷ்மிகா கூறியதாவது:-


“18 வயதில் இருந்தே எனக்கு வாழ்க்கை ஒரு மாரத்தான் போட்டி போல் இருந்தது. போட்டி முடிந்தது என்று நினைக்கும் போதெல்லாம் மீண்டும் போட்டி தொடங்கி விடும். இதை நான் ஒரு குறையாக சொல்லவில்லை. நான், ஒரு விடுதி மாணவி. பள்ளிப் பருவத்தில் இருந்து உயர் கல்வியை முடிக்கும் வரை, விடுதியில்தான் தங்கி படித்தேன். ஊரடங்கு நாட்களில் நான் வீட்டிலேயே இருக்கிறேன். அக்கம்பக்கத்தினர் யாரும் தங்கள் வேலையை பற்றி பேசவில்லை. இதை நான் மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்.” 


ராஷ்மிகா மந்தனா, Rashmika Mandanna, ராஷ்மிகா, மந்தனா, Rashmika, Mandanna, கீதா கோவந்தம், , Geetha Govindam, விதை2விருட்சம், vidhai2virutcham, seedtotree, seed2tree, vidhaitovirutcham,