ஞாயிறு முதல் முழு ஊரடங்கு அமல் - முதல்வர் அதிரடி அறிவிப்பு 

ஞாயிறு முதல் முழு ஊரடங்கு அமல் - முதல்வர் அதிரடி அறிவிப்பு 



உலகெங்கும் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து, உயிரிழப்பு க்களும் ஏற்பட்டு உலகையே கதிகலங்கி நிற்கிறது. இந்நிலையில் இந்த கொரோனா இந்தியாவிலும் அதன் தாக்கம் ஏற்பட்டு வருவதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 30 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டபோதிலும் இன்னும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. 


இந்நிலையில் வரும் மே 3ஆம் தேதி ஊரடங்கு முடிகிறது. குறிப்பாக‌ தமிழ்நாட்டில் இன்னும் கொரோனா பாதிப்பு எதிர்பாராத அளவிற்கு எகிறிக் கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த தற்போது தமிழக முதல்வர் சில அதிரடி அறிவிப்பினை அறிவித்துள்ளார்.


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
சென்னை, கோவை, மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன் கிழமை வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஞாயிறு காலை 6 மணி முதல் புதன் இரவு 9 மணிவரை முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் சேலம், திருப்பூரில் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 28 வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும்.


முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 5 மாநகராட்சிகள் தவிர மற்ற மாநகராட்சிகளில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும் கொரோனா தொற்று பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடு களை அதிகரிக்க முடிவு. முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி. மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலனன்ஸ் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. தலைமைச் செயலகம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி. மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.


அம்மா உணவகங்கள், ATM போன்றவை வழக்கம்போல் செயல்படும். கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின் படி செயல்படும். அதேபோல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும். உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். ஐ.டி. நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம். பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


Curfew, Edappadi Palaniswami, ஊரடங்கு உத்தரவு, எடப்பாடி பழனிசாமி, Edappadi, Palaniswami, ஊரடங்கு, உத்தரவு, எடப்பாடி, பழனிசாமி, விதை2விருட்சம், vidhai2virutcham, vidhaitovirutcham,seedtotree, seed2tree, Chief Minister, CM, ஞாயிறு முதல் முழு ஊரடங்கு அமல் - முதல்வர் அதிரடி அறிவிப்பு ,