இரவு படுக்கும் முன் இதை கண்டிப்பாக செய்யுங்க‌

இரவு படுக்கும் முன் இதை கண்டிப்பாக செய்யுங்க‌



காலையில்தான் நாம் அழகாக இருக்க, பல ஒப்பனைகள் செய்து கொள்கிறோம் ஆனால் இரவில் ஓய்வு வேண்டி உடல் சோர்ந்து இருக்கும் இதனால் முகத்தை மட்டும் பெயரளவிற்கு கழுவி விட்டு, இரவு உணவு சாப்பிட்டு முடித்து அப்படி டீவி பார்த்துக் கொண்டே தூங்கிவிடுவோம். இதை தவறு என்று சொல்ல வில்லை. ஆனால் இரவு நேரத்தில் அடுத்த நாள் காலையில் நீங்கள் அழகாக தெரிய சில விஷயங்களை செய்யலாம். 


ஆம்! இரவு நேரத்தில் நீங்கள் படுக்கும் முன்பு, இரண்டு தேக்கரண்டி புதினா சாறு அரை மூடி எலுமிச்சம்பழச் சாறு ஆகிய இரண்டையும் கலந்து பின் அதோடு பயிற்றம் பருப்பு மாவை சிறிதளவு சேர்த்து நன்றாக‌ கலந்து எடுத்து அதனை முகத்தில் ஒரு லேயராக‌ தடவி தோராயமாக ஒரு பத்து நிமிடங்கள் வரை ஊற விட்டு அதன்பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுத்து சில நிமிடங்கள் கழித்து சுத்தமான குளிர்ச்சியான தண்ணீர் கொண்டு முகத்தை நன்றாக கழுவிய பிறகு மிருதுவான துணியை கொண்டு முகத்தில் ஒத்தடம் கொடுப்பது போல் முகத்தில் உள்ள ஈரத்தை அகற்ற வேண்டும். அப்புறம் பாருங்கள் உங்கள் முகம் பளபளப்பாவதோடு கவர்ச்சியாகவும் இருக்கும். மேலும் உங்கள் முகத்தில் பருவந்த தழும்பு ஏதாவது இருந்தாலும் இதனை ஒவ்வொரு இரவின் போது செய்து வந்தால் தழும்புகளும் மறைந்து உங்கள் முகத்தின் கவர்ச்சி மேம்படும். 


#இரவு, #ராத்திரி, #புதினா, #புதினா_சாறு, #எலுமிச்சம்_பழம், #பயிற்றம்_பருப்பு, #பயிற்றம்_மாவு, #பயித்தம்_மாவு, #ஐஸ், #பனிக்கட்டி, #கவர்ச்சி, #விதை2விருட்சம், #முகம், #கழுவுதல், #Night, #mint, #mint_juice, #lemon_fruit, #legumes, #cultivated_flour, #crop_flour, #ice, #glamour, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,