ப‌ணத்திற்காக நடிகையின் வித்தியாசமான முயற்சி

ப‌ணத்திற்காக நடிகையின் வித்தியாசமான முயற்சி



   
தமிழில் கார்த்தியுடன் தீரன் திரைப்படத்திலும், சூர்யாவுடன் என்.ஜி.கே. திரைப் படத்தில் நடித்து தமிழ் திரைரசிகர்களுக்கு அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங், மேலும் தெலுங்கிலும் எப்போதும் பிஸியாக நடித்து வருகிறார்.


கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் பொதுவாக நடிகர்கள் நடிகைகள் பலரும் கொரோனா நிவாரண நிதி திரட்டி வருகிறார்கள். ஆனால் நடிகை ரகுல் பிரீத் சிங்  வித்தியாசமான முயற்சியில் கொரோனா நிதி திரட்ட முடிவு செய்துள்ளார்.


இதற்காகவே பிரத்யேகமாக‌ அவர் ஒரு யூ-டியூப் சேனலை ஆரம்பித்துள்ளார். அதில் கிடைக்கும் தொகையை அப்படியே பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்க அவர் முடிவு செய்துள்ளார்.  தனது இந்த முயற்சிக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


#ரகுல்_பிரீத்_சிங், #கொரோனா, #Rakul_Preet_Singh, #corona, #Covid19, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,